
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி உயிரிழப்பு
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஏ.டி.என். மஹகுமார உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
களுத்துறை பகுதியைச் சேர்ந்த இவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவார்.
வெலிசர மார்பு நோய் வைத்தியசாலையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.
சுமார் 15 ஆண்டுகள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் பணியாற்றிய இவர், உதவி பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்து, இலங்கையின் பல பகுதிகளில் பணியாற்றியுள்ளார்.
அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்