பொலிஸாரின் சுற்றிவளைப்பில் நான்கு பேர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில், கடந்த 24 மணி நேரத்தில், சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த டிப்பர் வாகனம் இரண்டு மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அதே பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து, 25 லீற்றர் கசிப்பும் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நான்கு பேரும், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுதவுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.