
பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!
தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அமைதியாகச் செயற்படுமாறு, பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த நாட்களில் தேர்தல் சட்ட விதிகளை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
