பொதுத் தேர்தல் : அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் இன்று புதன்கிழமை கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசிக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்