பேஸ்புக் பயனாளர்களுக்கு இழப்பீடு கோர வாய்ப்பு!
மெட்டா நிறுவனம் செலுத்த ஒப்புக்கொண்ட 50 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 1600 கோடி இலங்கை ரூபாய்) இழப்பீட்டைப் பெறுவதற்கு, 311,000க்கும் அதிகமான அவுஸ்திரேலிய பேஸ்புக் பயனாளர்களுக்கு தற்போது விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவுஸ்திரேலியர்களின் தனியுரிமை மீறலுக்காக செலுத்தப்படும் மிகப்பெரிய இழப்பீட்டுத் தொகை இதுவாகும் என்று கருதப்படுகிறது.
2010களில் இடம்பெற்ற கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா தரவு ஊழல் காரணமாகவே இந்தப் பிரச்சினை எழுந்தது.
இந்தத் தரவு மீறலின்போது, ஒரு பிரிட்டிஷ் தரவு நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 87 மில்லியன் பேஸ்புக் கணக்குகளின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றிருந்தது.
அவுஸ்திரேலிய தகவல் ஆணையாளரின் விசாரணையில், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் ‘This Is Your Digital Life’ என்ற ஆளுமை வினாவிடை செயலியைப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் 53 பேஸ்புக் பயனாளர்கள் மட்டுமே இந்தச் செயலியை நிறுவியிருந்தனர்.
இருப்பினும், இந்த 53 பேரின் நண்பர்களாக இருந்த 311,074 அவுஸ்திரேலிய பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களையும் அந்தச் செயலியால் கோர முடிந்தது.
2024 டிசம்பரில், மெட்டா நிறுவனத்துடனான வழக்கை தகவல் ஆணையாளர் முடித்துக்கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக, 50 மில்லியன் டொலர் இழப்பீட்டைச் செலுத்த மெட்டா ஒப்புக்கொண்டது.
இந்த இழப்பீட்டைக் கோருவதற்கான செயல்முறை 2025 ஜூன் 30 அன்று திறக்கப்பட்டது. தகுதியுள்ள அவுஸ்திரேலியர்கள் 2025 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
