பேஸ்புக் ஒன்றுகூடல்: 12 இளைஞர்கள் கைது!

அவிசாவளை குருகல்ல பகுதியில் விடுதி ஒன்றில் போதைப்பொருட்களுடன் இருந்த குற்றச்சாட்டில் 12 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து கஞ்சா போதைப் பொருள், விடுதி உரிமையாளரிடம் இருந்து ஹஷிஸ் போதைப்பொருள் மற்றும் 22 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடுதியின் உரிமையாளர் பேஸ்புக் ஊடாக இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்