பேருந்திலிருந்து இறங்க முற்பட்டவருக்கு நேர்ந்த கதி

பொல்கஹவெல பிரதேசத்தில் பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட ஒருவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

பொல்கஹவெல – கந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அலவ்வவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த குறித்த நபர் பேருந்தின் சில்லினுள் அகப்பட்டு காயமடைந்த நிலையில் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.