
பேரனின் தாக்குதலில் உயிரிழந்த தாத்தாவும் பாட்டியும்
-பதுளை நிருபர்-
பேரனின் தாக்குதலுக்கு இலக்காகி தாத்தா பாட்டி ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பல்லகெடுவ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
80 வயதுடைய தாத்தாவையும், 70 வயதுடைய பாட்டியையும் பேரன் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, 80 வயதுடைய தாத்தா தெமோதர வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும், 70 வயதுடைய பாட்டி மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாக்கிய சந்தேக நபரான பேரன் தலைமறைவாகி உள்ளதாக பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த பேரன் போதைவஸ்து பழக்கத்திற்கு அடிமையானவர் என்று பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்