பெற்ற மகளை வன்புனர்வுக்குட்படுத்திய தந்தை

மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் தன்னுடைய மூத்த மகளை நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொக்கா தோட்டத்தை சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்று மகள்களின் தந்தையான குறித்த நபர் தனது மூத்த மகளான 19 வயது யுவதியையே நீண்ட காலமாக வன்புனர்வுக்குட்படுத்தி வந்துள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் தன்னுடை தந்தை தன்னை தொடர்ச்சியாக அடித்து துன்புறுத்துவதாக குறித்த யுவதி ​முறைப்பாடு செய்துள்ளார். அதன்பின்னர் தந்தை கைது செய்யப்பட்டார்.

அந்த யுவதியான பாடசாலை மாணவி வைத்திய பரிசோதனைக்காக, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய பரிசோதனையின் போது அந்த யுவதி பல வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட யுவதியின் தாய், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்குப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

யுவதி, வைத்தியசாலையில் சிக்கிச்சையை முடித்துக்கொண்டதன் பின்னர், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்