பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைய மேலும் தாமதமாகும்

38

40,000 மெட்ரிக் டன் பெற்றோலுடன் நேற்று வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடையவிருந்த கப்பல்  மேலும் தாமதமடையும், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பதிவில் நேற்று மாலை தெரிவித்திருந்தார்.

குறித்த விநியோக நிறுவனம் இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு அறிவித்துள்ளது, எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் தாங்கிய குறித்த கப்பல், நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாட்டை வந்தடைய இருந்தது.

எனினும், குறித்த கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடையும் என பின்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த கப்பல் இலங்கையை வந்தடையும் தினம் பின்னர் அறிவிக்கப்படும், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 

Sureshkumar
Srinath