பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் இடைநிறுத்தம் நீடிப்பு

பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வணிக இடைநிறுத்தத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பதிவுசெய்யப்பட்ட பங்கு மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்ளுர் கருவூல உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் ஒரு முதன்மை வணிகரின் வணிகம் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வதிலிருந்து இடைநிறுத்தத்தை இன்று திங்கட்கிழமை முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் நடத்தப்படும் விசாரணைகளைத் தொடர்வதற்காக இந்த இடைநீக்க நீட்டிப்பு மேற்கொள்ளப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.