போதைப்பொருளுடன் இலங்கை மீன்பிடி படகு சுற்றிவளைப்பு

சுமார் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 6 இலங்கை மீனவர்களை மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

மீன்பிடி படகையும் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த போதைப்பொருள் தெஹிபாலே மல்லி என்ற நபருக்கு சொந்தமானது என தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.