
பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைசெய்தவர் கைது
மிஹிந்தலை பிரதேசத்தில் பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொரமடலாவ பிரதேசத்தில் தமது தாயுடன் வசித்து வந்த 52 வயதுடைய பெண்ணொருவரே நேற்று சனிக்கிழமை வீட்டில் தனிமையில் இருந்த போது இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் தாய் வெளியில் சென்று வீடு திரும்பிய போது , மகள் படுக்கையில் சுயநினைவின்றி இருப்பதையும், 47 வயதுடைய சந்தேக நபரும் வீட்டில் இருப்பதையும் பார்த்துள்ளார்.
இதனையடுத்து, அவசர நோயாளார் காவுவண்டியை அழைத்துள்ளார். அங்கு வந்து மருத்துவ உதவியாளர்கள் அந்த பெண் உயிரிழந்துள்ளதை உறுதி செய்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்த மிஹிந்தலை பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்