புதையல் தோண்டிய சம்பவம் – அறிக்கை கோரிய நீதிமன்றம்

பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட சந்தேக நபர்கள் அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகஸ்கடவல பகுதியில் புதையல் பெறும் நோக்கில் முன்னெடுத்த அகழ்வு குறித்து அவசர அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்ததாக ‘அத தெரண’ நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

அகழ்வு முன்னெடுக்கப்பட்ட கோவிலுக்கு அருகில் உள்ள கல் சுவரைக் கொண்ட தொல்பொருள் பெறுமதிமிக்க நிலம், தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான நிலமா என்பதை ஆராய்ந்து,

அது தொடர்பான தொல்பொருள் அறிக்கையை தாமதமின்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபராக தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவர் தொலைபேசி ஊடாக பொலிஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தாரா என்பதைத் கண்டறிய,

அனைத்து சந்தேக நபர்களின் தொலைபேசி எண்கள் குறித்த அறிக்கைகளை உடனடியாக பொலிஸாருக்கு வழங்குமாறு அநுராதபுரம் பதில் நீதவான் சந்தன வீரக்கோன் ஏற்கனவே அனைத்து தொலைபேசி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.