புது வருடத்துக்கான கடமைகளை ஜனாதிபதி செயலக ஊழியர்கள் ஆரம்பித்தனர்

தமிழ் ,சிங்கள புத்தாண்டிற்குப் பின்னர் புதிய வருடத்திற்கான பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதி பணிக்குழாமிற்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் அவர்களுடன், சுமூகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் புதிய நாட்டை உருவாக்கும் ஜனாதிபதியின் திட்டத்தை வலுப்படுத்த இந்த ஆண்டு அரச வேவையிலுள்ள அனைவரும் ஆற்றலுடனும் உறுதியுடனும் செயல்படுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச சேவையில் முன்மாதிரியான நிறுவனமாக மாறுவதன் மூலம், புதிய மனப்பாங்குகளை வளர்த்துக் கொண்டு தங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுமாறு ஜனாதிபதியின் செயலாளர், ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், இதுவரை அவர்கள் செய்த அர்ப்பணிப்புக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்