புதிய நியமனம்

மொனறாகலை நிர்வாக மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஆர்.எம்.பசன் ஸ்ரீ பண்டார ரத்னாயக்க அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அதற்கமைய, வெற்றிடமாகவுள்ள மொனறாகலை மாவட்ட செயலாளர் அரசாங்க அதிபர் பதவிக்கு தற்போது பொது நிருவாக, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான ஏ.ஜி.நிசாந்தவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நியமிப்பதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.