
புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் இறுதி நேரத்தில் தீர்மானிக்கப்படும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு
புதிய ஜனாதிபதியாக யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பில் இறுதி நேரத்திலேயே தீர்மானம் மேற்கொள்ளப்படும், என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை எனவும், இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு மற்றும் மத்திய செயற்குழு என்பன கூடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
