புங்குடுதீவு பாலத்தில் விபத்து!

-யாழ் நிருபர்-

புங்குடுதீவு வாணர் பாலத்தின் ஊடாக பயணித்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பாலத்தின் ஊடாக உழவு இயந்திரம் பயணித்த போது திடீரென சரிந்து வீழ்ந்து போனமையினாலேயே இவ்வாறு விபத்து இடம்பெறறதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இப்பாலமானது அறுபது ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது .

புங்குடுதீவு மக்களின் நிதியில் அமைக்கப்பட்ட ஐந்து கிலோமீற்றர் நீளமான இக்கடற்பாதையில் பயணிப்பவர்கள் வார்த்தைகளினால் கூறமுடியாதளவுக்கு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவுக்கு இப்பாலத்தினூடாகவே ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர் .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்