பீடி இலைகளுடன் 7 பேர் கைது

புத்தளம் – வென்னப்புவ பகுதியில்  பீடி இலைகளுடன் 7 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பொலிஸாரால் 1100 கிலோ நிறையுடை பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 7 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லொறி, வேன் மற்றும் பீடி இலைகளுடன் கைது செய்யப்பட்ட 7 பேரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.