பிலிப்பைன்ஸில் கனமழை: 13 பேர் பலி

தென் சீனக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.

‘கெமி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது கிழக்கு நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸ் அருகே மையம் கொண்டுள்ளது. இதனையடுத்து பிலிப்பைன்ஸில் தொடர்ந்தும் கனமழை பெய்து வருகின்றது.

இதன்காரணமாக பிலிப்பைன்ஸில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்