பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவுக்கு விளக்கமறியல்!

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் கைது செய்யப்பட்ட பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தபோது நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொலை செய்ததாக பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி டுடெர்டே மீது குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ஐ.நா சபையின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் , நேற்று முன்தினம் நெதர்லாந்தின் ரோட்ரிகோ டுடெர்டே, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஐ.நா. சபையின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட டுடெர்டே, நெதர்லாந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மனித உரிமை மீறல் வழக்கில் , டுடெர்டே மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, டுடெர்டே ஆதரவாளர்கள், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.