பிறந்தநாளை கொண்டாடிய இளைஞரின் தவறான முடிவு

இந்தியாவில் குமரி மாவட்டம் குளச்சல் அருகே, இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குளச்சல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பாபு ( வயது 31 ) என்பவரே தற்கொலை செய்துள்ளார்.

குறித்த இளைஞர் பலரிடம் கடன் வாங்கி நிதி நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ததாகவும், அதன் உரிமையாளர் தலைமறைவானதால் 15 லட்ச ரூபாய் வரை கடனில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

மனைவியின் 25 சவரன் நகைகளை அடகு வைத்து கடனை அடைத்துவந்த நிலையில், தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டதால், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமலும், மனைவியின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமலும் தவித்துவந்ததாக சொல்லப்படுகிறது.

நேற்றைய முன்தினம் புதன்கிழமை மாலை, மனைவி உடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய குறித்த இளைஞர், பின் மனைவியை அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

செல்போன் அழைப்புகளை குறித்த இளைஞர் எடுக்காததால், மனைவி கூறியதன் பேரில், பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்