பிரித்தானியா நோக்கிப் பயணித்த ஏதிலிகள் படகு விபத்து: 8 பேர் பலி

பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கிப் பயணித்த ஏதிலிகள் படகு விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

இதன்போது காயமடைந்த 6 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சூடான், சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 59 பேர் குறித்த படகில் பயணித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2 நாட்களில் மாத்திரம் ஆங்கில கால்வாயை 200க்கும் அதிகமான ஏதிலிகள் கடக்க முயன்றதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்