பால் ஊட்டிக்​கொண்டிருந்த தாய் பலாத்காரம்

கம்பஹா பூகொடை பகுதியில் வீடொன்றில் தனது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தா​யை இளைஞர்கள் மூவர் வன்புணர்ந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பூகொடை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தாயின் குழந்தையை அபகரித்த 3 இளைஞர்கள் குழந்தையை தாக்கப்போவதாக அச்சுறுத்தி தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பூகொடை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

குழந்தையின் தாய் வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றுமொறு சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்