பாலை வனத்தில் தவிக்கும் இளம் பெண்கள் உபரில் ஆர்டர் செய்து ஒட்டக பயணம்: வைரலாகும் காணொளி

6

துபாயில் பாலைவனத்தில் உபரில் முன்பதிவு செய்து ஒட்டக பயணம் மேற்கொண்டதாக தெரிவித்து வெளிவந்த வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில், இரண்டு இளம்பெண்கள் தங்கள் வாகனம் செயல் இழந்ததால் பாலைவனத்தில் தவிப்பதாக தெரிவிக்கின்றனர். பின்னர் அதில் ஒரு பெண் தன்னிடம் இருந்த உபர் ஆப்-பில், ஓட்டக சவாரி குறித்து தேடி உடனே அந்த சேவையை முன்பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த சில நிமிடங்களில், ஓட்டகத்தை அழைத்துக்கொண்டு ஒருவர் வருவதை காண முடிகிறது. மேலும் அவர் தன்னை உபர் ஒட்டக டிரைவர் என்றும் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்.

இதையடுத்து, அந்த இளம் பெண்கள் உற்சாகமாகி ஒட்டகத்தில் ஏறி அமர்வதும் வீடியோவில் உள்ளது. மேலும் ஓட்டக டிரைவர் தனக்கு இது தான் தொழில் என்றும் பாலைவனத்தில் சிக்கியவர்களை மீட்கும் உபர் ஓட்டக டிரைவர் தான் என்றும் தெரிவிக்கிறார்.

வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜெட்செட் துபாய் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டிருந்த இந்த வீடியோவில் உபரில் ஒட்டக சவாரிக்கு புக் செய்த புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

 

Sureshkumar
Srinath