பாரிய விபத்துக்களின் அறிக்கை – பாராளுமன்ற நூலகத்தில் கையளிப்பு!

பாராளுமன்ற நூலகத்தின் பயன்பாட்டுக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் அண்மையில் பாராளுமன்ற நூலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ‘வீதிப் பாதுகாப்புச் செயற்றிட்டம் 2025-2026’ என்ற புத்தகம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவினால் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேரவிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற 6 பாரிய வீதி விபத்துக்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்னாயக்கவின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்ற நூலகத்திற்கு வழங்கப்பட்டன.

இதற்கு அமைய,

2025.09.04ஆம் திகதி எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்து

2025.06.21ஆம் திகதி பதுளை – மஹியங்கனை வீதி திம்பிரிகஸ்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்து

2025.05.11ஆம் திகதி நுவரெலியா – கண்டி வீதியில் கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து

2024.11.01 ஆம் திகதி பதுளை – மஹியங்கனை வீதியில் அம்பகஹ ஓயாவில் நடந்த வீதி விபத்து

2023.01.20ஆம் திகதி நுவரெலியா – ஹட்டன் வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வீதி விபத்து

2020.01.06ஆம் திகதி பசறை – மடுல்சீமை 06வது மைல் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து

தொடர்பான அறிக்கைகளே இவ்வாறு பாராளுமன்ற நூலகத்திற்கு வழங்கப்பட்டன.