பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் பணி இடைநிறுத்தம்

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.