பாராளுமன்ற கட்டிடத்திற்குள் இருந்து பாராளுமன்ற உறுப்பினரின் சடலம் மீட்பு!

பின்லாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சடலம் அந்நாட்டு பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் சமூக ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் எமிலி பெல்டோனன் (வயது 30) என்பவரே நேற்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாராளுமன்றத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ அலுவலகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் அவர், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவும், அதன்பின்னர் கோடை காலத்தில் அவர் விடுமுறையில் இருந்ததாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.