பாதசாரி கடவையில் மாணவி விபத்து

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன்-குடாகம பகுதியில் பாதசாரி கடவையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஒன்பது வயது மாணவி படுகாயமடைந்து டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து, நேற்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை பாதிரியார் ஒருவர் ஓட்டிச் சென்றதாகவும், விபத்தில் பாதிரியார் காயமடைந்து டிக்கோயா-கிளங்கன் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணையில், பாதிரியார் தனது மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் கவனக்குறைவாக ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக ஹட்டன் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.