பாடசாலை வேன் கோர விபத்து : மாணவர்கள் உயிரிழப்பு!

குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பாடசாலை வேனில் 7 மாணவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற போது சம்பவ இடத்திலேயே பாடசாலை வேனின் சாரதி மற்றும் இரண்டு மாணவர்கள் உயிழந்துள்ளனர்.

ஏனைய மாணவர்களில் ஒருவரை தவிர மற்றையவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது