பாடசாலை வேனுக்குள் வைத்து 6 வயது மாணவி துஷ்பிரயோகம்

பிலியந்தலையில் வேன் ஒன்றுக்குள் வைத்து பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறு வயது ஒன்பது மாதமான சிறுமி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு மாணவியின் முகத்தில் எதனையோ தெளித்துவிட்டு மயக்கமடைய செய்த பின்னர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும் விசாரணையில் அது உறுதி செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்