பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டின் விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, 2023 ஆம் கல்வி ஆண்டின் இரண்டாவது தவணை அக்டோபர் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.

மூன்றாம் தவணை 01  நவம்பர்  2023 புதன்கிழமை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்