
பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி திருட்டு
மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின்
ரீ – 56 வகை துப்பாக்கி திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொலிஸ்நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாள் கிழமை கடமையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த துப்பாக்கி திருடிச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், மாத்தளை சிரேஸ்ட பொலிஸ்துறை அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
