பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல் : 6 பேர் பலி!

பாகிஸ்தான் – நவ்ஷேரா மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன

நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள தொழுகை மண்டபத்தில் குறித்த தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கும் போது இத்தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

மாணவர்களுக்கு போதனை செய்யும் தலைவரொருவரும் இதன்போது கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.