பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் 2 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு இவ்வாறு முதலாம் நிலை மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்