பர்மிங்ஹாம் சென்ற இலங்கையர்கள் நால்வருக்கு கொரோனா

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக பர்மிங்ஹாம் சென்ற இலங்கை வீரர்கள் மூவரும பயிற்சியாளர் ஒருவரும் கொவிட் தொற்றுக்குளள்ளாகியுள்ளதாகக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளான இலங்கையர்கள் தற்பேது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பர்மிங்காம் அலெக்சாண்டர் விளையாட்டு மைதானத்தில் நாளை (29) இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

110 இலங்கை வீராங்கனைகள் உட்பட 72 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 5,054 வீராங்கனைகள் இந்த வருட பொது நலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுகின்றனர்.