பதுளைக்கு புதிய சொகுசு ரயில் சேவைமுன்னெடுக்கப்படுகிறது
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை ELLA WEEK END EXPRESS என்ற புதிய சொகுசு ரயிலை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் இந்த ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது .
சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு இந்த ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
350 ஆசனங்களைக் கொண்ட இந்த ரயில் சனிக்கிழமைதோறும் அதிகாலை 5.30 இற்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிப் புறப்படவுள்ளது. .
இதேநேரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 09 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
