
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க முடியும்?
வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் நாடளாவிய ரீதியில் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க வசதி செய்யப்படும் என பரப்பப்படும் செய்தி பொய்யானது என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் வாக்காளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படும் உத்தியோகபூர்வ வாக்கு அனுமதிச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச் சாவடியைத் தவிர வேறு எந்தவொரு வாக்குச் சாவடியிலும் வாக்களிக்க அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தகவல்கள் தொடர்பான ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

