பட்டம் விட்ட சிறுவர்கள் மின்சாரம் தாக்கி மரணம்

13 வயது சிறுவர்கள் இருவர் பட்டம் விட்டு விளையாடும் போது, அதி சக்திவாய்ந்த மின்சாரம் தாக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பண்டாரகம அடலுகம குருந்துவத்தையில் உள்ள மூன்று மாடி வீட்டின் மேல் மாடியில் குறித்த சிறுவர்கள் பட்டம் விட்டுக்கொண்டு இருந்தனர்.

இதன்போது, அருகிலுள்ள உயர் அழுத்த மின்கம்பியில் பட்டம் சிக்கியுள்ளது.

இதனையடுத்து, அலுமினிய குழாயை பயன்படுத்தி சிக்கியிருந்த பட்டத்தை சிறுவர்கள் தட்டியுள்ளனர்.

இதன்போது, மின்சாரம் சிறுவர்களை தாக்கியதில் பலத்த வெடிச் சத்தம் கேட்ட நிலையில், சிறுவர்களின் உடலில் மின்சாரம் தாக்கி எரிந்துள்ளனர்.

அருகிலுள்ளவர்கள் சிறுவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்