
பசறை – மடுகஸ்தலாவை வீதியூடான போக்குவரத்து தடை
பசறையில் இருந்து மடுகஸ்தலாவை செல்லும் வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரமாங்கடை சந்திக்கு அருகாமையில் பாரிய மண்மேட்டுடன் கற்களும் சரிந்து வீதியில் விழுந்துள்ளமையினாலேயே குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மலையக பகுதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் வானிலை தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்