பங்கு விலைச் சுட்டெண் 13,511.73 புள்ளிகளை எட்டியது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று புதன்கிழமை 13,511.73 புள்ளிகளை எட்டியது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த அளவில் வளர்ச்சி அடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.2 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாகக் கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்