நேபாள பிரதமர் பதவி விலகினார்!
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை தொடர்பாக தலைநகர் காத்மண்டு உட்பட நேபாளம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு அரசியலமைப்பு ரீதியாக தீர்வு காண வழி வகுக்கும் வகையில் பிரதமர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நேபாள பிரதமர் தனது பதவி விலகலை அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து அங்குள்ள கட்டடமொன்றுக்கு தீ வைத்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
