நேபாளத்தில் நிலஅதிர்வு

நேபாளத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தின் சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள பைரவ்குண்டா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.51ற்கு நிலஅதிர்வு உணரப்பட்டதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலஅதிர்வு இந்தியா, திபெத் மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலஅதிர்வால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.