நெஞ்சு எரிச்சல் குணமாக

நெஞ்சு எரிச்சல் குணமாக

நெஞ்சு எரிச்சல் குணமாக

🟠பொதுவாக நெஞ்செரிச்சல் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. ஏனெனில் சரியாக உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உணவை செரிக்க உதவும் அமிலமானது தேங்கி, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மேலும் அவை நீடித்தால், அந்த அமிலமானது உணவுக்குழல் வழியாக மேலே சென்று நெஞ்சில் எரிச்சலை உண்டாக்குகின்றன. ஆனால் இத்தகைய நெஞ்செரிச்சலை ஒருசில உணவுகள் மூலமாக சரிசெய்ய முடியும். அது என்ன உணவுகள் என்பதை இப் பதிவில் பார்க்கலாம்.

📌எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஆகிய இரண்டு பழங்களிலும் அதிகமான அளவில் அசிடிக் ஆசிட் மற்றும் அஸ்கார்பிக் ஆசிட் இருக்கிறது. அதுமட்டுமல்லாது, இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை அந்த அமிலங்களின் வீரியத்தை குறைத்து, எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தையும் குறைக்கும்.

📌டயட்டில் காரம் மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனாலும் எரிச்சலைத் தடுக்கலாம். ஏனெனில் காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருட்கள் கூட எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கும்.

📌தினமும் போதுமான அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் எரிச்சலை ஏற்படுத்தும் அமிலமானது கரைந்து வெளியேறிவிடும். அதுமட்டுமின்றி, தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் சீராக இயங்கும்.

📌நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு ஹிலிகோபாக்டர் பைலோரியா என்னும் பாக்டீரியம், எரிச்சலை ஏற்படுத்தும் அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கிறது. எனவே கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், அந்த பாக்டீரியா அழிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் தடைப்படும்.

📌இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், நெஞ்செரிச்சலைத் தடுக்கலாம்.

📌அதிமதுரம் எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை குறைப்பதில் சிறந்தது. அதுமட்டுமன்றி இதில் உள்ள நார்ச்சத்துஇ உடலில் கொலஸ்ட்ரால் தங்குவதைத் தடுக்கும்.

📌பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. கால்சியம் உடலில் அதிகம் இருந்தால், அது எரிச்சலை உண்டாக்கும் அமிலம் அதிகம் சுரப்பதை தடுக்கும்.

📌வாழைப்பழத்தில் ஆன்டாசிட்கள் உள்ளன. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குறைவடையும்.

📌அப்பிளில் கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் போது, ஆப்பிளை சாப்பிட்டால், எரிச்சலைத் தடுக்கலாம்.

📌இரண்டு டீஸ்பூன் அப்பிள் சீடர் வினிகரை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், நெஞ்செரிச்சலை தடுக்கலாம்.

📌பொதுவாக புதினா இலைகள் செரிமான பிரச்சனையை சரி செய்து, ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஆகவே நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் புதினா டீ தயார் செய்து அருந்தி வருவதன் மூலம் நெஞ்செரிச்சல் பிரச்சனை சரியாகும்.

📌அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அவற்றில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சவும். பின் இடித்து வைத்துள்ள இரண்டு ஏலக்காயை சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி கொள்ளுங்கள். பின் மிதமான சூட்டில் அருந்த வேண்டும். ஏலக்காய் நறுமணம் தரும் பொருள்மட்டும் இல்லை ஜீரணம் சக்தியை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதினால். இந்த ஏலக்காய் நீரை அருந்துவதன் மூலம் நெஞ்செரிச்சல் பிரச்சனையும் குணப்படுத்துகின்றது.

நெஞ்சு எரிச்சல் குணமாக

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்