
நூதனமான முறையில் தேக்க மரக் குற்றிகள் கடத்தல்: ஒருவர் கைது
நூதனமான முறையில் தேக்க மரக் குற்றிகள் கடத்தல்: ஒருவர் கைது
கருங்கல்லுக்குள் தேக்கம் குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற டிப்பருடன் நேற்று சனிக்கிழமை சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் (துயககயெ) நோக்கி குறித்த மரக் குற்றிகளை கொண்டு வந்தபோது சாவகச்சேரி பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
15 இலட்சம் ரூபா பெறுமதியான தேக்கம் குற்றிகளே இதன் போது பொலிஸார்ல் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.