
நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடத்தில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை
தாய் நாட்டிற்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் ஆசி வேண்டி நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடத்தில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜைகளுக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் மற்றும்
மஹா தீபராதனை பூஜைகளுடன் நுவரெலியா பிரதேச்தை சேர்ந்த அறநெறி பாடசாலை மாணவர்களின் விஷேட கலை நிகழ்வுகளும் இடம்பெற்று வருகிறது .
நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய ஸ்ரீ காயத்ரி பீடத்தின் நிர்வாக அறங்காவலர் சக்திவேல் சந்திரமோகன் தலைமையில் பூஜைகள் இன்று புதன்கிழமை மாலை 6:00 மணி முதல் இடம்பெற்று வருகிறது.
முதல் முறையாக புத்தசாசன சமய கலாச்சார அமைச்சு, இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து அமைப்பு ஆகியன நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம் காயத்ரீ பீடத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் கமகெதர திஸாநாயக்க மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் , தலைமையக பொலிஸ் பரிசோதகர் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன் போது கலை நிகழ்வுகளுடன் கலந்துகொண்ட அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.