நீர்த்தேக்கத்திற்குள் கவிழ்ந்த வேன்

உடவளவை நீர்த்தேக்கத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வேனில் இருந்த மூன்று பேர் படுகாயமடைந்து உடவளவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உடவளவை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.