நீதிமன்றத்தில் இருந்து கஞ்சாவை திருடிய நால்வர் கைது
கிளிநொச்சி நீதிமன்றத்தில் சான்றுபடுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கஞ்சாவை திருடிய நால்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் சான்றுபடுத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா திருடப்பட்டிருந்தது.
இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உப்புல செனவரத்தினவின் கீழ் இயங்கி வருகின்ற மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இரகசிய தேடுதலை மேற்கொண்டிருந்த வேளையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒருவர் நீதிமன்ற பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்