நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

நீண்டகாலமாக வீட்டில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் – ஊரெழு பகுதியில் 40 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வாக்கு மூலங்களுக்கு அமைவாக சுதுமலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

மானிப்பாய் – சுதுமலை பிரதேசத்தில் நீண்ட நாட்களாக வீட்டின் சமையல் அறையில் கசிப்பு உட்பத்தி செய்து வந்த 36 வயதுடையே ஆணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸாரும் கோப்பாய் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் இணைந்து இந்த நபரை கைது செய்துள்ளார்கள்.

இதன்போது 600 லீற்றர் கோடா, 60 லீற்றர் கசிப்பு, உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் காஸ் சிலிண்டர் என்பன கோப்பாய் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.

குற்றப்பிரதேசமானது மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி என்பதால், சந்தேகநபர் சான்றுப் பொருட்களுடன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.