-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு வேளைகளில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் நீண்ட காலமாக ஆடுகளை திருடிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிளின் மூலம் கொண்டு சென்று ஆட்டின் பெறுமதியை விட அரைவாசி விலைக்கு விற்பதாக ஆடுகளின் உரிமையாளர்களால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது
முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்று வியாழக்கிழமை இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
இரண்டு சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் திருடப்பட்ட ஆடுகள் ஆட்டு உரிமையாளரினால் இனங்காணப்பட்டு தர்மபுரம் பொலிசாரால் ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.




